Tuesday, July 17, 2012

வாழும் கலை பயிற்சி தந்த முதிர்ச்சி!........ Swaminathan Bharathi





விகடன் பத்திரிகையின் குமரி மாவட்ட தலைமை நிருபரின் வாழும் கலைப் பயிற்சி அனுபவம் 


எனக்கு சின்ன வயசில் இருந்தே எதையும் வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற அவா அதிகம்.சோ லா காலேஜ் படிக்கும் போதே விகடனில் மாணவ நிருபராக தேர்வு பெற்று ஜூ.விகடன் உட்பட விகடன் குழுமத்தின் அனைத்து இதழ்களிலும் எழுதி குவித்திருந்தேன்...அப்போதெல்லாம் இன்னும் அழகாக....இன்னும் எழில் கொஞ்சும் நடையில் எடிட்டிங்கே இல்லாமல் செய்தி வர வேண்டும் என்ற பொறி இருந்தது.குமரி,னெல்லை,தூத்துக்குடி என 3 மாவட்டங்களோடு,திருவனந்தபுரத்தையும் சேர்த்து விட்டு பசுமை விகடனுக்காக அழைந்து திரிந்தேன்....பல செய்திகள் அட்டை படமாக வே வந்தது...ஆனந்தத்தின் விளிம்பிற்க்கு போனென்.ஒரு கட்டத்தில் செய்திகள் எடிட் ஆகாமல் வரத் துவங்கியது.......அதில் வேலையின் சுவாரஸ்யம் சிறிது குறைந்தது......இன்னொரு கட்டத்தில் தலைப்பு,புல் ஸ்டாப்,கமா கூட எடிட் ஆகாமல் போகவே டைப் செய்து அனுப்பிய நியூஸை புக்கில் ரிட்டன் பார்ப்பதையே விட்டு விட்டேன்.முன்பெல்லாம் என்.சுவாமிநாதன் என்ர பெயரில் ஒரு பெட்டி செய்தி வந்தாலே “நீ எழுதுனத நீயே எத்தனை தடவல படிப்பன்னு “எங்க அம்மா திட்டுற வரைக்கும் படிச்ச நான் இப்போதெல்லாம் வாசிப்பு பழக்கத்தையே அடியோடு விட்டு விட்டேன்.....ஒரு கட்டத்தில் விகடனில் பணி நிரந்தரமும் செய்து விட...இப்போதெல்லாம் வெறுமனே இன்கிரீமெண்ட்க்காகவும்,7ம் தேதி ஏ.டி.எம்மில் ஏறும் சம்பளத்துக்காகவும் வேலை பார்ப்பது ஒரு கட்டத்தில் வெறுத்து போய் விட்டது. 
வேலைப் பளுவால் பலரும் விரக்தியின் உச்சத்தில் கரைந்து போவது வாடிக்கை தான்....ஆனால் ஒரு பத்திரிகையாளன் அப்படி முடங்கி போய் விட்டால் பல நல்ல செய்திகள் மட்டுமல்ல.....சமூகத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய நியாயமான மாற்றங்களும் நிகழாமல் போய் விடும்......அப்போது தான் என் சித்தப்பா சங்கர் அவர்கள் சுட்டிக்காட்டலில் கண்ணில் பட்டது ஆர்ட் ஆஃப் லிவ்விங்க்.............”என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிசமும் ...ஒவ்வொரு நொடியும் .......நானே செதுக்குனதுடா!!!!!!!!!!!”ன்னு பில்லாவில் தல சொல்ற மாதிரி வாழும் கலை பயிற்சி ஆசிரியர் மரியாதைக்குரிய மணிகண்டன் ஜி “இந்த நிமிசத்துல...இந்த நொடியில உங்களுக்கு எதுனா பிரச்னை இருக்கான்னு.....”ஆரம்பித்து வகுப்பெடுக்க ஆரம்பித்ததில் பல நாள் இறுக்கம் தளந்தது போல் ஒரு பீலிங்........
”மூச்சு”இந்த ஒற்றை வரி மந்திரம் தான் மனித உடலை ஆளும் இயந்திரம்....அந்த இயந்திரத்தை முறையாக சுற்ற விட்டு நம் மன இருக்கத்தை ஓட...ஓட விரட்டும் சுதர்சனகிரியா....மானுடர்களுக்கு உற்சாக உரமூட்டும் என்பது நிஜம்......என் வால்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை/////////////////////நான் இதுவரை உணர்ந்திராத அனுபவத்தை பெற்றது போல் உணர்கிறேன்.....
இனி பிறக்க போகும் ஒவ்வொரு நாளும் புது நாளே.....
பழைய வேகத்தோடு ,சாதிக்க துடிக்கும் அதே உத்வேகத்தோடு மீண்டும் ஓட துவங்குகிறேன்.....கண்டிப்பாக ஓட...ஓட தூரம் குறையல தனுஸ் சாங் மாதிரி இது இருக்காது.....இலக்கை அடையும் வரை இந்த பயணம் தொடரும் ...!
நல்ல பயிற்சி நண்பர்களே நேரம் இருப்பவர்கள் முயற்சித்து பாருங்களேன்..............

No comments: