Friday, October 2, 2009

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி தமிழக முதல்வருக்கு பாராட்டு



பெங்களுரு, செப்டம்பர் 29: வாழும் கலை நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி, தமிழ் நாட்டில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக முதல்வரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
"இது தொடர்பாக, முன்பே, வாழும் கலை அமைப்பினர் பல லக்க்ஷ தமிழ் மக்களின் கை ஒப்பம் பெற்றுள்ளனர். இதனை மான்ம்பு மிகு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல இருந்தோம்.. இத்தருணத்தில், முதல்வரின் இம்முயற்சி எங்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியை அளித்துள்ளது. எனவே, கைஒப்பம் பெறுவதை நிறுத்தியுள்ளோம். இம்முயற்சி, தமிழக அரசின் மனித நேயத்தை உயர்த்திக் காட்டுகிறது," என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி தெருவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதமே ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி அவர்கள் இதே கோரிக்கையை வலியுருத்தியிருந்ததுநினைவு கூறத்தக்கது.

No comments: